Thursday, September 25, 2014

Nice ஜோக்ஸ் 16

 1. ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
 பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!
எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?
அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!
என்னது பாட்டி செத்துட்டாங்களா.. வட போச்சே


2. மகன்: "நான் ஒரு விசயம் சொல்லணும்"
அப்பா: "சாப்பிடும்போது பேசக்கூடாது"
(சாப்பிட்டபிறகு)
 அப்பா: "என்னடா சொல்லு?"
மகன்: "உங்க சாப்பாட்டுல அம்மா விஷம் வச்சிருக்காங்க!"


3. "ஹலோ.. சத்தமா பேசுங்க, கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது!"
 "அங்கிருந்துதான்டி பேசறேன், வந்து காப்பாத்து..."


4. கிராமத்து தந்தை: எப்படியோப்பா.. 4 வருஷ எஞ்சினியரிங் படிப்பை முடிச்சிட்ட..
 அடுத்து என்னய்யா செய்ய போறே..?!!
 தில்லாங்கடி மகன்: அதுக்கப்புறம் அரியர்ஸுன்னு ஒரு மேல் படிப்பு இருக்குப்பா.
அதை படிக்கணும்..!!


5. மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில் வருகிறார்கள். இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..


6. கண்டக்டர்: படியில் நிக்காதப்பா.
உள்ளேதான் கடல் மாதிரி இடம்
இருக்கே. உள்ளே வா!
மாணவன்:எனக்கு நீச்சல் தெரியாது....
அதுதான் கரையிலேயே நிக்கிறேன்


7. மகன் : அப்பா நம்ம வீட்டில காக்கா கத்துனா ரிலேடிவ்ஸ் வருவாங்கால?
அப்பா: எஸ்
மகன்: அப்படின எப்போ திரும்பி போவாங்க?
அப்பா: உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க.


8. நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
    நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.


9. கல்யாணி:உங்ககிட்ட தாலி கட்டிண்டு இந்த 8 வருஷத்துல என்னாத்தக்கண்டேன்?
கிட்டு: நீ என்னாத்தக்கண்டயோ இல்லியோ, நான் முழு எமகண்டம்,7-1/2 சனில்லாம் பாத்தாச்சு!!


 10. டாக்டர் : தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா உங்கள் வாழ்நாளில் டாக்டரை தள்ளி வைக்கலாம்.
 குசும்பு ரமேஷ்: உங்கள் மனைவி ஆப்பிள் சாப்பிட்டால் உங்களை தள்ளிவைக்கலாமா டாக்டர்.
 டாக்டர் : ?????????????

No comments: