Thursday, September 25, 2014

மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ்:


1. மிஸ்டர் எக்ஸ் இருவருக்கும் வழியில் 2 குண்டுகள் கிடைத்தன.
மிஸ்டர் எக்ஸ் 1 - ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.
மிஸ்டர் எக்ஸ் 2 - வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?
மிஸ்டர் எக்ஸ் 1 - போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு.


2 . (ஜெயிலில்) உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.
ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?


 3 . ஒரு ஆள்: ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?
போய் AC முன்னாடி உக்காருவேன்.
அப்பயும் முடியலேன்னா?
AC ஐ on பண்ணுவேன்.


4. மிஸ்டர் எக்ஸ் 1 : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
மிஸ்டர் எக்ஸ் 2 : இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?


5. ஒருதடவை மிஸ்டர் எக்ஸ் இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத குறைதான். அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.

 
 6. இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.
எப்படி?
குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்.


 7. மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.
இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?
பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்.


8. எதுக்கு மிஸ்டர் எக்ஸ் butter ஐ ஜன்னல் வழியா தூக்கிப்போடறாரு?
butterfly பாக்கத்தான்.

No comments: