Thursday, September 25, 2014

மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ்:


1. மிஸ்டர் எக்ஸ் இருவருக்கும் வழியில் 2 குண்டுகள் கிடைத்தன.
மிஸ்டர் எக்ஸ் 1 - ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.
மிஸ்டர் எக்ஸ் 2 - வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?
மிஸ்டர் எக்ஸ் 1 - போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு.


2 . (ஜெயிலில்) உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.
ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?


 3 . ஒரு ஆள்: ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?
போய் AC முன்னாடி உக்காருவேன்.
அப்பயும் முடியலேன்னா?
AC ஐ on பண்ணுவேன்.


4. மிஸ்டர் எக்ஸ் 1 : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
மிஸ்டர் எக்ஸ் 2 : இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?


5. ஒருதடவை மிஸ்டர் எக்ஸ் இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத குறைதான். அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.

 
 6. இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.
எப்படி?
குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்.


 7. மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.
இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?
பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்.


8. எதுக்கு மிஸ்டர் எக்ஸ் butter ஐ ஜன்னல் வழியா தூக்கிப்போடறாரு?
butterfly பாக்கத்தான்.

Nice ஜோக்ஸ் 17

1. கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''


2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
 "அது.... குருவி!"


3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்


4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."

5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"


6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
 

7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!


8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT


9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.


10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...


சிட்டிசன்:

கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

: தெரியாதே...

நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

..................................................


காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

..................................................


சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

..................................................


ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damil பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

..................................................


கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

..................................................


திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(
முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(
இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(
மூன்றாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..................................................


நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

..................................................


ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

..................................................

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

..................................................

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

--

Nice ஜோக்ஸ் 16

 1. ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
 பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!
எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?
அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!
என்னது பாட்டி செத்துட்டாங்களா.. வட போச்சே


2. மகன்: "நான் ஒரு விசயம் சொல்லணும்"
அப்பா: "சாப்பிடும்போது பேசக்கூடாது"
(சாப்பிட்டபிறகு)
 அப்பா: "என்னடா சொல்லு?"
மகன்: "உங்க சாப்பாட்டுல அம்மா விஷம் வச்சிருக்காங்க!"


3. "ஹலோ.. சத்தமா பேசுங்க, கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது!"
 "அங்கிருந்துதான்டி பேசறேன், வந்து காப்பாத்து..."


4. கிராமத்து தந்தை: எப்படியோப்பா.. 4 வருஷ எஞ்சினியரிங் படிப்பை முடிச்சிட்ட..
 அடுத்து என்னய்யா செய்ய போறே..?!!
 தில்லாங்கடி மகன்: அதுக்கப்புறம் அரியர்ஸுன்னு ஒரு மேல் படிப்பு இருக்குப்பா.
அதை படிக்கணும்..!!


5. மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில் வருகிறார்கள். இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..


6. கண்டக்டர்: படியில் நிக்காதப்பா.
உள்ளேதான் கடல் மாதிரி இடம்
இருக்கே. உள்ளே வா!
மாணவன்:எனக்கு நீச்சல் தெரியாது....
அதுதான் கரையிலேயே நிக்கிறேன்


7. மகன் : அப்பா நம்ம வீட்டில காக்கா கத்துனா ரிலேடிவ்ஸ் வருவாங்கால?
அப்பா: எஸ்
மகன்: அப்படின எப்போ திரும்பி போவாங்க?
அப்பா: உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க.


8. நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
    நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.


9. கல்யாணி:உங்ககிட்ட தாலி கட்டிண்டு இந்த 8 வருஷத்துல என்னாத்தக்கண்டேன்?
கிட்டு: நீ என்னாத்தக்கண்டயோ இல்லியோ, நான் முழு எமகண்டம்,7-1/2 சனில்லாம் பாத்தாச்சு!!


 10. டாக்டர் : தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா உங்கள் வாழ்நாளில் டாக்டரை தள்ளி வைக்கலாம்.
 குசும்பு ரமேஷ்: உங்கள் மனைவி ஆப்பிள் சாப்பிட்டால் உங்களை தள்ளிவைக்கலாமா டாக்டர்.
 டாக்டர் : ?????????????

Nice ஜோக்ஸ் 15

 1.விமலா: டாக்டர்.. தலையில் பேன் தொல்லை தாங்க முடியலை....
டாக்டர்: இந்தப் பேன் மருந்த தூங்கப் போகும்போது போடுங்க.''
விமலா: "பேன் எப்பத் தூங்கப் போகுதுன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்?''
டாக்டர்: ங்ஙே......!!!!


2. நோயாளி: " காதுல பஸ் ஓடுர மாதிரி
சத்தம் கேட்குது டாக்டர் ,"
( பரிசோதித்து விட்டு )
டாக்டர்: " அப்படி ஒண்ணும் எனக்கு... கேட்கலையே , ! "
 நோயாளி: " இப்போ ஏதாவது சிக்னல்ல நின்னுருக்குமோ ? "


3.உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்..
சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்..

4. கணவன்: “குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: “ஏன், என்னாச்சு?”
கணவன்: “குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.!!??”

 5. ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க??
பையன்: கழுத்துல சார்!


6.Husband : Kamala Oru Cup Coffee…..! .?
 Wife : Yennaadhu.?!
 Husband : Unakku Coffee Tharattumaannu Keattean…!


7.அம்மா: “ஏன்டா ரமேஷ் அழுவுற?”
 ரமேஷ்: “அப்பா எனக்கு முத்தம் தர மாட்டேங்குறார் மா”
 அம்மா: “நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாருடா”
 ரமேஷ்:”அப்போ நம்ம வீட்டு வேலக்காரிக்கு மட்டும் அடிக்கடி முத்தம் தர்ராரு...”
  செத்தாண்டா சேகரு...


8. "டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"


9. நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.


10.ஊருல train டிக்கெட், bus டிக்கெட், cinema டிக்கெட்.....
 வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்........
 இந்த ஒரே ஒரு Hall ticketa வச்சிக்கிட்டு நா படுற அவஸ்த இருக்கே.........அய்ய ய்ய ய்ய யோ..