Monday, August 20, 2012

Nice ஜோக்ஸ் 6

1."அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"


2.காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!


3."பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?" "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."


4."லோன் செக்க்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?" "எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"


5."அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?" "ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"


6."என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."


7."சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?" ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"


8."டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க." "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."


9."கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.." "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."


10."அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?"
"அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."

No comments: