Wednesday, August 1, 2012

Nice ஜோக்ஸ் 4

1.எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா?


2.இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!


3.என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.


4.டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.


5.தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?


6.நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?


7.அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
அப்படியா
ஆமாம். அது பட்ட மரம்


8.குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?


9.ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!


10.Maala: முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
Leela: மஞ்சள் கரு
Maala: இல்லை "ட்" இருக்கு

No comments: