Monday, October 10, 2011

அறுவை ஜோக்ஸ் வகை

1.மகன்: அப்பா, காருக்கு முன்னாலே ஏம்ப்பா, 'எல்'ன்னு போர்டு தொங்க விட்டிருக்காங்க?
தந்தை: அது 'பேங்க் லோன்'லே வாங்கின வண்டியா இருக்கும்.


2.ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


3.ஒரு அப்பாவும் பையனும் உணவு விடுதிக்கு சென்றார்கள்
அப்பா : வெயிட்டர் 1 பீர் & 1 ஐஸ்கிரீம் கொண்டு வா
மகன் : ஏன்ப்பா? உங்களுக்கு பீர் பிடிக்காதா
அப்பா : !!!!!!!!!!!!!!!


4.சர்தார்ஜியிடம் புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது,
அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார்,"ஆண் குழந்தை ஆண் குழந்தை" என்று கத்தியபடி.
நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு


5.என்ன அந்த மனுஷன் எப்ப பார்த்தாலும் ஒரே சூட இருக்காரே யார் அவர்?
அவர் ஒரு தர்மாஸ் ஃப்ளாஸ்க் வியபாரி..


6.love என்றது ரஜினிகாந்த் மாதிரி, அது எப்ப வரும் என்னது யாருக்கும் தெரியாது................
அனா love வந்த BOYS சத்தியராஜ் மாதிரி, அவங்க charactar ஐ யாராலையும் புரிஞ்சுக்கவே முடியாது....
BUT , பொண்ணுங்க மட்டும் வடிவேல் மாதிரி, எதயுமே
PLAN பண்ணி பண்ணுவாங்க............


7."நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"
"ஆமா, ஆன்ட்டி..."
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"


8."மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?" "ஏன்?" "மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"


9.அ‌ப்பா : இதோ பாருடா! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க்
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...
மக‌ன் : அ‌ப்போ ரொம்ப மோசமா எழுதினா?
அ‌ப்பா: டாஸ்மாக்!


10.ஒருவர் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி
மற்றொருவர்: அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?
அவர்: இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..

No comments: