Sunday, July 3, 2011

சிரிக்க முடிஞ்சா சந்தோசம்

1.அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


2.மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..


3.உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,


4.போர்க்களத்தில் கொசுவலை:
நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....
.நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?

.ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?

நண்பர்: ..............


5.பாட்டி…இந்தா இந்த பலூனை ஊதிக் கொடு…!
-
போடா..வயாசாச்சு…என்னாலே முடியாது..!
-
அப்பாதான் சொன்னாங்க…’பாட்டி, சின்ன விஷயத்தைக்கூட
ஊதி ஊதி பெரிசாக்கிடுவா’னு…!

6.ஆசிரியர்:- மாணவர்களே நானும் உங்களில் ஒருவன். என்னை
வேறு படுத்திப பார்க்க வேண்டாம்…!
-
மாணவன்:- சரிடா மச்சி! கீழே உட்காரு…!

7.வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு, பாம்பாட்டியை கூட்டிட்டு
வந்து அடிச்சோம்..!
-
அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு, பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?


--
Thanks for
Mr.H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com

No comments: