Thursday, September 20, 2012

Nice ஜோக்ஸ் 9

1."அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு." "எப்படி சொல்றீங்க?" "வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."



2."முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!" "எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!


3."பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.." "சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"


4."தலைவருக்கு எத்தனை மனைவி?" "சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"


5.மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை. ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....


6.கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா? மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?


7."இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்." "நிஜமாவா?" "ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."


8."தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.." "யார் வயிற்றின் மீது டாக்டர்..?"


9."உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?" "கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."


10."என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?" "சல்லடை..!"

No comments: