Tuesday, January 10, 2012

அறுவை ஜோக்ஸ் பாகம் 1

1.சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

எப்படிச் சொல்றீங்க ?

ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.


2.என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

எப்படி ?

ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.


3.மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?

அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே !


4.போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க !
ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க !

அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார் !


5.எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.
டேய் ,,,,,,,,,,,,, பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?


6.டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
அப்புறம் ?
அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்


7.ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.


8.அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !
அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.


9. மகன் : நான் மேலே படிக்கப் போறேன்
அப்பா : May-லேதான் விடுமுறை ஆச்சே


10.நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு !
லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
நீங்க வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா ! என் கன்னம் வீங்கிப் போச்சு !

No comments: