Friday, June 17, 2011

சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!

1.ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

2.அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!உன்
அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

3.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"


5. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....


6. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் – Bull


7. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை
சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

8. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.


9.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில்
பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.


10.உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.


11.என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


12.ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.


வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

No comments: