Wednesday, February 16, 2011

சிரிப்பு வருது சிரிப்பு வருது

1.ஜோதிடர்: உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
கஸ்டமர் : எது பல்லா !?

2.பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

3.மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

4.மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து
சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல
இருக்கான்னாவது சொல்லுங்க!

5.நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

6.உங்க கதை ஏன் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வருது?
இது செக்குமாடு பற்றிய கதையாச்சே!”


7.ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
குப்பை சார்!


8.கண் பார்வை ரொம்பக் குறைஞ்சிப் போச்சி டாக்டர்.
யாரைப் பார்த்தாலும் முகம் சரியா தெரிய மாட்டேங்குது.
அப்படின்னா கழுத்து வரைக்கும்தான் சரியா தெரியுதா?


9.நான் வீட்டில் இருந்தேன்னா எனக்கு நேரம் போறதே தெரியாது.
ஏன்… அவ்வளவு ஜாலியா இருக்குமா?
இல்லை. எங்க வீட்டில் கடிகாரமே இல்லை.


10.டாக்டரும்,பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

11.உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

No comments: