Tuesday, January 11, 2011

நகைச்சுவையும் கடியும்

1.Test’-க்கும்
‘Quiz’-க்கும்
என்ன வித்தியாசம்??
‘Test’-ல - Answer தெரிஞ்ச Pass, ‘Quiz’-la - Answer தெரியலே-ந்தான் Pass

2.Teacher: படித்து முடிச்சதற்க்கு அப்புறம் என்ன பண்ணலாம் என்று இருக்கீங்க?
Student: Book'கை மூடி வைக்கலாம் என்று இருக்கேன்.

3.இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே...
ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..


4.தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

5.எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?

6.கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

7.Man : சுவாமிஜி உலகம் என் இப்படி சுத்துது …?
Swamiji : ஒரு quarter தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது ,
3 quarter தண்ணி இருக்குற உலகம் என்ன சுத்தக் கூடாதா ?


8. "ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

9."விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"
"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

10.டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சச்சினின் மனைவியும் மகனும் பேசிக்கொண்டது;
அம்மா... பாரும்மா.....அப்பா சிக்ஸர் சிக்ஸரா விளாசித் தள்ளுறார் .
நல்லாப் பாருடா ! அது மேட்ச் இல்ல ; பூஸ்ட் விளம்பரம்.

No comments: