Monday, August 20, 2012

Nice ஜோக்ஸ் 6

1."அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"


2.காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!


3."பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?" "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."


4."லோன் செக்க்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?" "எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"


5."அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?" "ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"


6."என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."


7."சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?" ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"


8."டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க." "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."


9."கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.." "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."


10."அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?"
"அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."

Friday, August 10, 2012

Nice ஜோக்ஸ் 5

1."எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"


2."ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."


3."வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."


4.இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"


5."பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"


6."முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"


7."கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"


8."உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"


9."புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"


10."எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?" "இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

Wednesday, August 1, 2012

Nice ஜோக்ஸ் 4

1.எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா?


2.இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!


3.என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.


4.டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.


5.தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?


6.நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?


7.அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
அப்படியா
ஆமாம். அது பட்ட மரம்


8.குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?


9.ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!


10.Maala: முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
Leela: மஞ்சள் கரு
Maala: இல்லை "ட்" இருக்கு