Thursday, October 20, 2011

கடிக்கலாம் வாங்க

1.எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?


2.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.


3.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.


4.அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.


5. ஒருவர்:: மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
மற்றவர்: டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.


6.1008 வேலை இருந்தாலும் உங்களுக்கு 1 sms
அனுப்புவதில் உள்ள சுகம் இருக்கே ஐயோ ஐயோ
அது msg`ல சொன்ன புரியாது.
Rs.100 Recharge பண்ணி விடுங்க Call பண்ணி சொல்றேன்.


7.ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?
மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே,அதனாலேதான்


8.பூனை குறுக்கே போனால் நல்லதா, கெட்டதா? :))
அது நீ மனுசானா இல்லை எலியாங்கிறதைப் பொறுத்தது :))


9.என்னை சின்னப்பிள்ளையிலே எல்லாரும் செல்லமா கன்னுக்குட்டி.., கன்னுக்குட்டினு கூப்பிட்டாங்க.
இப்போ
தடிமாடுன்னு கூப்பிடறாங்க


10.முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும். (தத்துவம்…)

Tuesday, October 18, 2011

Tower of Pisa




Italic font -டை press பண்ணினால் அந்த எழுத்து சாய்வாக வரும் இதன் காரணம் இப்பொழுது புரிகிறதா.

Monday, October 10, 2011

அறுவை ஜோக்ஸ் வகை

1.மகன்: அப்பா, காருக்கு முன்னாலே ஏம்ப்பா, 'எல்'ன்னு போர்டு தொங்க விட்டிருக்காங்க?
தந்தை: அது 'பேங்க் லோன்'லே வாங்கின வண்டியா இருக்கும்.


2.ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


3.ஒரு அப்பாவும் பையனும் உணவு விடுதிக்கு சென்றார்கள்
அப்பா : வெயிட்டர் 1 பீர் & 1 ஐஸ்கிரீம் கொண்டு வா
மகன் : ஏன்ப்பா? உங்களுக்கு பீர் பிடிக்காதா
அப்பா : !!!!!!!!!!!!!!!


4.சர்தார்ஜியிடம் புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது,
அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார்,"ஆண் குழந்தை ஆண் குழந்தை" என்று கத்தியபடி.
நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு


5.என்ன அந்த மனுஷன் எப்ப பார்த்தாலும் ஒரே சூட இருக்காரே யார் அவர்?
அவர் ஒரு தர்மாஸ் ஃப்ளாஸ்க் வியபாரி..


6.love என்றது ரஜினிகாந்த் மாதிரி, அது எப்ப வரும் என்னது யாருக்கும் தெரியாது................
அனா love வந்த BOYS சத்தியராஜ் மாதிரி, அவங்க charactar ஐ யாராலையும் புரிஞ்சுக்கவே முடியாது....
BUT , பொண்ணுங்க மட்டும் வடிவேல் மாதிரி, எதயுமே
PLAN பண்ணி பண்ணுவாங்க............


7."நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"
"ஆமா, ஆன்ட்டி..."
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"


8."மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?" "ஏன்?" "மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"


9.அ‌ப்பா : இதோ பாருடா! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க்
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...
மக‌ன் : அ‌ப்போ ரொம்ப மோசமா எழுதினா?
அ‌ப்பா: டாஸ்மாக்!


10.ஒருவர் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி
மற்றொருவர்: அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?
அவர்: இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..

Friday, October 7, 2011